முத்தியால்பேட்டை: உலக நன்மை மற்றும் கிராமம் நலம் பெற, முத்தியால்பேட்டை கிராமவாசிகள் சிலர், சபரிமலை அய்யப்பனுக்கு மாலையணிந்து நடை பயணத்தை துவக்கியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு, அய்யப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வேன், கார் ஆகிய வாகனங்களில் செல்வது வழக்கம். நேற்று காலை, 8:00 மணிக்கு, ஏழு பேர் அடங்கி குழுவினர், முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நடை பாதையாக செல்வதற்கு பயணத்தை துவக்கியுள்ளனர்.