மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் கிருத்திகை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு. காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. காலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர்,பாலசித்தர்,வள்ளி, தெய்வானை, சுப்பிரணியர் சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு நடந்த சந்தனம், தேன் அபிஷேகத்திற்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9:30 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.