Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சபரிமலையில் பக்தர்கள் விளக்கு பூஜை! தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை கூத்தரே நடராஜரே கோஷத்துடன் சிதம்பரம் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
02:01

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவத்தையொட்டி நடந்த நடராஜர் திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினம் சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. வேதபாராயணத்துடன் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சிறப்பு வாகனப் புறப்பாடு செய்து வீதி உலாக்கட்சி நடக்கிறது.

நடராஜர் தேரோட்டத்தையொட்டி, அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைப்பெற்று சுவாமிகள் சித்சபையில் இருந்து புறப்பாடு செய்து மஞ்சத்தில் அமர்ந்து காலை 6 மணிக்கு யாத்திரா தானம் புறப்பாடு செய்து மேளதாளங்களுடன் ஆனந்த நடனமாடியவாறு காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரில் சுவாமிக்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜரத்தின தீட்சிதர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை வழிப்பாடுகள் தீபாராதனைகள் நடந்தது. காலை 8 மணிக்கு ஆயிரகனக்கான பக்தர்கள் தில்லை அம்பலத்தானே,  ஆடல் வல்லானே, நடராஜ பெருமானேஎன விண்ணை முட்டு கோஷம் எழுப்பி தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்மன் மற்றம் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர் தேர் நன்பகல் 12 மணிக்கு கஞ்சித்தொட்டி சந்திப்பில் தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar