Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனம் ... ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா பவானீஸ்வரர் கோவிலில் அமர்க்களம் ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
தர்மபுரி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
12:01

ஓசூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில், சிவன் கோவில்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு பூஜைகளுடன், ஆருத்ரா தரிசனம் நடக்கும். தர்மபுரி குமாரசுவாமி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசனத்தில், சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு, பால், பஞ்சாமிர்தம், இளநீர் உட்பட, 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு, திருஆபரண அலங்காரம் செய்யப்பட்டு, குமாரசுவாமி பேட்டை முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில், தேர்ப்பேட்டை பச்சைக்குளம் பத்ர காசி விஸ்வநாதர் கோவில், அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில், சூளகிரி காசி விஸ்வநாதர் ஆலயம், ஆவல் நத்தம் பசுவேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல், கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், கவீஸ்வரன் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. வேலூர், கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரினசம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவெம்பாவை பாடல்களை தரிசனம் செய்தனர். பின் சுவாமி திருவீதி உலா வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar