பதிவு செய்த நாள்
19
ஜன
2017
12:01
உடுமலை: உடுமலை மூங்கில்தொழுவு கள்ளியூர் கிராமத்தில், தொப்பக்கவ்வா கோவில் கும்பாபிேஷக விழா இன்று, நடக்கிறது. பழமை வாய்ந்த இக்கோவிலில், விநாயகர், நாலுகம்பம் நல்லட்டி நாயக்கர், தொப்பக்கவ்வா சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா நேற்று துவங்கியது. சலகெருது அழைத்தல், தேவராட்டம், ஒயிலாட்டம் உட்பட கிராமப்புற கலைகள் நடத்தப்பட்டன. மேலும், விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், தேவதுந்துபி முழங்கல், கணபதி ேஹாமம், யாகசாலை பிரவேசம், சலகெருது பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று, காலை திருப்பள்ளியெழுச்சி, மகாசக்தி ேஹாமம், தன்வந்தி ேஹாமம் ஆகியவையும், காலை, 9:30 மணிக்கு மேல், கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து ஒன்பது கும்பிடு உட்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.