பதிவு செய்த நாள்
19
ஜன
2017
03:01
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு மார்கழி மாதம் 61 மூலிகைகள் கொண்டு, 40 நாட்கள் காய்ச்சப்பட்ட தைலம் சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், தினமும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கிளி ஆண்டாளின் திருக்கரத்தை அலங்கரிக்கிறது. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் ஆகும். தினமும் புதிய கிளியை ஆண்டாளுக்குச் சமர்ப்பித்த பின், முந்தைய நாள் கிளியை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்கூட்டி பதிவுசெய்து கொள்ளல் வேண்டும்.