பதிவு செய்த நாள்
19
ஜன
2017
03:01
திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது, உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில். இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் கடலாடி ஈஸ்வரன். இந்த சுயம்பு லிங்கத்தின் மீது சூரியன் தன் பொன் கிரணங்களால் மார்கழி முப்பது நாட்களும் ஒளி படரச் செய்து வழிபடும் அற்புத தரிசனத்தை காலை ஆறு மணியளவில் தரிசிக்கலாம். முப்பது நாட்களும் முழுமையாக சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படர்வது இங்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. கருவறைக்கு இடப்புறத்தில், பிரமசக்தி அம்பாள் தனிக் கோயில் கொண்டு அருள்புரிகிறாள். திருமணமாகாத பெண்கள் மார்கழியில் நோன்பிலிருந்து இறைவனையும் இறைவியையும் வழிபட, விரைவில் நல்ல வரன் அமையும் என்று கூறப்படுகிறது.