செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கூடார வல்லியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், ராம ஆஞ்சநேயர் கோவிலில், கூடார வல்லி சிறப்பு வழிபாடு மற்றும் பஜனை நடந்தது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து ராம பஜனை நடந்தது. ராமமூர்த்தி திரு மால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி துரை ரங்க ராமானுஜம் முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பஜனை நடந்தது. தமிழரசன், சசிகலா, தனபால் ஈஸ்வரர், பூவன்னார், லட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.