Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலம் ... அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் தாழம் பூவிற்கு மகிமை
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் தாழம் பூவிற்கு மகிமை

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
10:01

கீழக்கரை:  சிவாலயங்களில் நிராகரிக்கப்படும் தாழம் பூ, உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் மட்டும் மூலவர் மங்களநாதருக்கு சூடப்பட்டு வருவது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவன் கோயில்களில் ஒன்று உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில். இங்கு மூலவர் மங்களநாதருக்கு சுகந்த மணம் பரப்பும் தாழம் பூ சூடப்பட்டு வருகிறது. பொதுவாக சிவன் கோயில்களில் தாழம் பூ பயன்படுத்துவதில்லை. ஆனால் மங்களநாதருக்கு உகந்ததாக தாழம் பூ கருதப்படுகிறது. இதனால் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மட்டும் பூஜை பொருட்களில் தாழம் பூ தவறாமல் இடம்பெறுவதுண்டு.

இதுகுறித்து கோயில் ஸ்தானிக குருக்கள் கூறியதாவது:
ஜோதி பிழம்பான சிவபெருமானின் அடிப்பகுதியை காண மகாவிஷ்ணு, வராகமூர்த்தி அவதாரத்தில் பூமியை தோண்டி பார்த்தார். தலை பகுதியை பிரம்மன் ஆகாயத்தில் பறந்தவாறு தேடினார். அப்போது கீழ்நோக்கி பறந்து வந்த தாழம்பூவிடம், சிவனின் முடியை கண்டதாக தெரிவிக்குமாறு பிரம்மன் கூறியுள்ளார். இதனால் ஆதியும், அந்தமும் இல்லாத சிவனின் கோபத்திற்கு ஆளாகினர் பிரம்மாவும், தாழம்பூவும். கோயில் முன்புள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளிக்கப்பட்டது. தாழம் பூவிற்கு மங்களநாதரின் திருமேனியில் இடம்பெற உத்தரவும் வழங்கப்பட்டது. இதனால் தான் உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் மட்டும் மூலவர் மங்களநாதருக்கு தாழம் பூ சூடப்படுகிறது. இவ்வாறு புராணங்களில் இடம்பெற்றுள்ள இக்கோயிலின் வரலாற்று சிறப்பை, இங்குவரும் பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar