பதிவு செய்த நாள்
23
ஜன
2017
11:01
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னதானக் கூடம், மாற்று எரிவாயு மூலம், செயல்படுவதற்கு திட்டமிடப்பட்டது.
அதற்காக, இரண்டு சாண எரிவாயு கலன்களும், ஒரு குப்பை மக்க வைக்கும் கலனும் அமைக்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை, ஐ.டி.சி., என்ற கார்ப்பரேட் நிறுவனம் வழங்கியது. திடக்கழிவு மோலண்மை திட்டத்தை, எக்ஸ்னோரா பசுமை பம்மல் என்ற தொண்டு நிறுவனம்,
செயல்படுத்தியது. கோவிலின் கோசாலையில் உள்ள கால்நடைகளிலிருந்து பெறப்படும் சாணம், கோவிலில் சேரும், காய்ந்த மலர் மாலைகள், பழங்கள், பிரசாத தொன்னைகள், பூ வகைகள், அன்னதானக்கூடத்திலிருந்து வரும் காய்கறிக் கழிவுகளை கொண்டு, எரிவாயுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.