திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன.,27ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோயிலில் ஜன.,26 மாலையில் அனுக்ஞை விநாயகர் முன் வாஸ்து சாந்தி பூஜை நடக்கும். ஜன.,27 காலை 9:15 முதல் 9:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நாட்களில் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் தங்கமயில், தங்கு குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். பிப்., 4 காலை வைரத்தேரோட்டம் முடிந்து தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,5ல் தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.