பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதி சுயம்பீஸ்வரர் கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து முன்னோர்களுக்கு தனி படையல் படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆதி சுயம்பீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகி உதயக்குமார் சிவாச்சாரியார் செய்திருந்தார். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் மற்றும் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரத்துடன், உள்பிரகார வலம் நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.