பதிவு செய்த நாள்
30
ஜன
2017
01:01
திருத்தணி: புதியதாக கட்டப்பட்டு வரும் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 3ம் தேதி, நடைபெறுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கங்கையம்மன் கோவில் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 3ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும், 2ம் தேதி காலை, இரு யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து மகா கும்பாபிஷேக பணிகள் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, வாஸ்து பூஜை, முதல்கால பூஜைகள் நடக்கின்றன. மறுநாள், காலை, 7:30 மணி முதல், காலை, 9:00 மணிக்குள் புதியதாக அமைக்கப்பட்ட மூலவர் அம்மன் சிலைக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.