Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயுமானசுவாமி கோயில் கும்பாஷேகம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித சேவையாற்றுவது இறை தொண்டிற்கு சமம் சுவாமி கவுதமானந்த மகராஜ் பொழிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2017
02:02

சென்னை : ”மனிதனின் தேவையை புரிந்து, சேவையாற்றுவதே இறை தொண்டு,” என, விவேகானந்தர் நவராத்திரி விழாவில், சுவாமி கவுத மானந்த மகராஜ் பேசினார். விவேகானந்தர், சென்னையில் தங்கிய ஒன்பது நாட்களை கொண்டாடும் வகையில், விவேகானந்தர் நவராத்திரி விழா சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நேற்று துவங்கியது. ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி பேசியதாவது: இந்தியாவின் பெருமையை இந்தியர்களுக்கு புரிய வைத்தவர் விவேகானந்தர். அவரது நுால்களை நாம் வாங்கி படிப்பதோடு, அதிலுள்ள சாராம்சங்களை சிறார்களுக்கும் போதிக்க வேண்டும். நமக்கு தெரிந்த விஷயங்களை விட தெரியாதது தான் அதிகம். பாரம்பரியத்தை விட்டு நாம் விலகி வருகிறோம். ஒரு விஷயத்தின் தாத்பரியம் தெரிந்தால் தான், அதை மற்றவர்களுக்கு புரியும் படி விளக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ் பேசியதாவது: நாட்டிற்கும், உலகிற்கும் எது நல்லதோ அது தான் விவேகானந்தர் சிந்தனையில் இருந்தது. தன்னை மனிதன் என அழைத்தவரை அவர் தெய்வமாக பார்த்தார். அவரின் அத்வைதம் தான் நமக்கு வேண்டும். மனிதனின் தேவையை அறிந்து, சேவையாற்றுவது, இறை தொண்டிற்கு சமம். அதைத்தான் விவேகானந்தர் போதித்தார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், நல்லி குப்புசாமி, இந்து என்.ரவி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, கேரள உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக, டாக்டர் சுதா ராஜா குழுவினரின் பக்தி பாடல்கள் இடம் பெற்றன. நிறைவாக வேளுக்குடி கிருஷ்ணனின் கீதையின் சாரம் எனும் தலைப்பிலான உபன்யாசம் நிகழ்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar