Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலகம் முழுவதும் தைபூச திருவிழா ... பழநியில் தைப்பூச திருவிழா 7 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள் பழநியில் தைப்பூச திருவிழா 7 மணிநேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
12:02

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று, மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகையாக அபிஷேகங்கள் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மலைக்குப்போகும் பாதையில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று விழா நடப்பது வழக்கம். நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேகப் பொருட்களை சிவாச்சாரியார்கள், பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மூலவருக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். இரண்டு உற்சவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டிற்கு ஒருமுறை, தைப்பூசத்தன்று மட்டுமே. பறவை காவடிகள்: நேற்று காலை முதல் பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் முகத்தில் அலகு குத்தியும், இளநீர், பன்னீர் காவடிகள் எடுத்தனர். மதுரை பக்தர்கள் பறவை காவடிகளில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் இந்த ஆண்டு முதல் முறையாக தைப் பூச திருவிழா கொண்டாப்பட்டது. தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி, தேவ சேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து உற்சவர்கள், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தங்கமயில் வாகனத்தில் உற்சவர் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar