Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலில் சுவாமி உருவம்: ரணபலி முருகன் ... ஆடி ஆசைந்து வலம் வந்த குன்றத்து தேர் ஆடி ஆசைந்து வலம் வந்த குன்றத்து தேர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 மார்
2017
11:03

தீர்த்தமலை: அரூர் அடுத்த, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமகம் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பல சிறப்புகள் வாய்ந்த, இத்திருத்தலத்தின் மாசிமகம் திருத்தேர்விழா கடந்த, 10ல் விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 11ல் கொடியேற்றமும், 13ல் குத்து விளக்கு பூஜை, 15 அன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, மாசிமகம் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், கோவில் முன் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய மூன்று தேர்கள் மீது முத்துக்கொட்டை, பொரி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை தூவி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின், முதலாவதாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, கோவிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இரண்டாவதாக தீர்த்தகிரீஸ்வரர் தேரும், அதற்கடுத்து வடிவாம்பிகை தேரும் இழுத்து வந்து நிலை நிறுத்தப்பட்டது. விழாவில், அரூர் ஆர்.டி.ஓ., கவிதா பங்கேற்றார். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, அரூர் அரசு போக்குவரத்து கிளை பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar