பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
ஈரோடு: இடபற்றாக்குறை காரணமாக, பெரிய மாரியம்மன் கோவிலில் நடக்கும் அன்னதானம், சின்னமாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது விழா நடப்பதால், சின்ன மாரியம்மன் கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: பெரிய மாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா தொடங்கியுள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்யவும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றவும், அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலம் வருவது என, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கோவிலில் நிற்கக்கூட இடமில்லாத நிலை உள்ளது. இதனால் கோவிலில் செயல்பட்டு வரும், திருக்கோவில் அன்னதான திட்டம், தற்காலிகமாக, அக்ரஹார வீதி, சின்ன மாரியம்மன் கோவிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்த பின் திரும்பவும் கோவிலுக்கு மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.