பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
ஓசூர்: ஓசூரில், 15 நாட்கள் நடந்த சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழா, நேற்று சயனோற்சவம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, 1,000 ஆண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5 இரவு, 7:00 மணிக்கு, அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 6 முதல், 10 வரை, சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகன உற்சவம் நடந்தது. 11 இரவு, 8:00 மணிக்கு புஷ்ப சாற்றுப்படி, 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 10:30 மணிக்கு, யானை வாகன உற்சவம் மற்றும், 12 காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு, 7:00 மணிக்கு, சயனோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. 15 நாட்கள் நடந்த சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழாவில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, மூன்று மாநிலத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.