ஒரு சொற்பொழிவாளர் இயேசுவின் மகிமை பற்றி மேடையில் பேசிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு ஒரு பேராசிரியர் வந்திருந்தார். சொற்பொழிவாளரின் பேச்சில் இலக்கணப்பிழைகள் அதிகம் இருந்தாலும், அவரது கருத்துக்கள் நன்றாக இருந்ததால் மக்கள் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இலக்கண பிழையுடன் பேசும் சொற்பொழிவாளர் மீது பேராசிரியருக்கு கோபம் ஏற்பட்டது. வேகமாக எழுந்தார். ÷ பச்சாளரை நோக்கி கையை நீட்டி, “நீர் பேசுவது ஒன்றும் சரியில்லை. இனிமேல் பேசக்கூடாது,” என்றார். பேச்சாளர் அமைதியாக, “ஐயா! உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன். இலக்கணம் தெரியாதவனாக இருந்தாலும் கூட, கடவுளின் கிருபையை பேசுகிறேன். உங்களைப் போன்ற படித்தவர்கள் என்றாவது இதுபற்றி பேசியிருக்கிறீர்களா? நீங்களெல்லாம் கடவுளுக்கு சேவை செய்வதில் இருந்து ஒதுங்கியிருப்பதால் தானே என்னைப் போன்ற அறிவிலிகள் மேடை ஏற வேண்டிய நிலை வந்தது?” என்றார். இதைக் கேட்ட பேராசிரியர் சொற்பொழிவாளரை தவறாகப் ÷ பசியதற்காக வருத்தப்பட்டார். “பிறர் கண்ணிலுள்ள துõசியைப் பாராதே, உன் கண்ணிலுள்ள உத்தரத்தைப் பார்,” என்கிறது பைபிள்.