Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்மென இரு! காலம் பொன்னானது கடமை கண்ணானது: ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கந்தபுராணம் அரங்கேறிய தலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
04:03

காஞ்சி குமரக்கோட்டத்துக்கு வேறொரு தனிச்சிறப்பும் உண்டு. ஆம்! கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் இது. குமரக் கோட்டத்து முருகப்பெருமானை நாள்தோறும் பூஜை செய்து வழிபட்டவர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், எமது வரலாற்றை அழகிய செந்தமிழில் பாடுக என ஆணையிட்டார். அத்துடன், திகட சக்கரச் செம்முகம் என்று முதல்அடியும் எடுத்துக் கொடுத்தார்.

ஆறுமுகனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய கச்சியப்பர், கந்தபுராணத்தை இயற்ற தொடங்கினார். ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் வீதம் எழுதிவந்தார் கச்சியப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அன்று எழுதிய பாடல்களை முருகனின் திருவடிகளில் வைத்துவிட்டுச் செல்வார். மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் அமைந்திருக்கும். இவ்வாறு முத்துக் குமரனின் அருளால் கந்தபுராணம் நிறைவு பெற்றது.

அரங்கேற்றத்தின்போது, கந்த புராணத்தின் முதல் வார்த்தையாக உள்ள திகட சக்கரம் என்பதில் சொற்குற்றம் இருப்பதாகக்கூறினார் புலவர் ஒருவர். மன வருத்தத்துடன் இரவு உறங்கச்சென்ற கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், புலவரின் சந்தேகத்தைத் தானே வந்து நிவர்த்தி செய்வதாகக் கச்சியப்பருக்கு வாக்களித்தார். அதன்படியே மறுநாள் புலவர் உருவில் அவைக்கு வந்து, திகட சக்கரம் என்ற வார்த்தை வீரசோழியம் என்ற நூலில் இருப்பதாகக் குறிப்பிட்டு மறைந்தார். வந்தவர் முருகப்பெருமான் என்பதை அறிந்த புலவர் பெருமக்கள் கச்சியப்பரின் முருகபக்தியை வியப்புடன் போற்றினர். இந்த அருள் நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தை இன்றைக்கும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar