Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் குரு பகவானுக்கு ... மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘கோவிந்தா’ கோஷத்துடன் காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
‘கோவிந்தா’ கோஷத்துடன் காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 மார்
2017
01:03

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு தொங்குட்டிபாளையத்தில், நூற்றாண்டு பழமையான, ஸ்ரீ பூமி நீளா ஸமேத சுயம்பு காரணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பழமை மாறாமல், புதிதாக முன் மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள், ஆகம விதிகளின்படி செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக, யாக சாலை பூஜைகள், தேரெழுந்தூர் ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார் தலைமையில், கடந்த, 27ம் தேதி துவங்கியது; தினமும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜை மற்றும்  நிறைவேள்வி நடந்தது. தொடர்ந்து, யாத்ர தானம், தச தானம், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 9:30 மணிக்கு, மூலவர் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காரணங்களுக்கு எல்லாம் காரணமாக, சுயம்புவாக  எழுந்தருளிய எம்பெருமானுக்கு, மகா கும்பாபி
ஷேகம் நடந்தது.

பக்தர்கள், ‘வெங்கட்ரமணா... கோவிந்தா’ என்று முழங்க, கோபுரங்களுக்கு, பட்டாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தச தரிசனம், திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், வேத பாராயணங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழு தலைவர் மணி, பொருளாளர் துரைசாமி, ஆலோசகர்  செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar