பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
01:04
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மத்தூர் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க் கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திருத்தணி, மத்தூர், பொன்பாடி, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள், கோவிலுக்கு வந்து மூலவர் அம்மனை தரிசித்தனர்.