ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவிலில் நடந்த ஸ்ரீராம நவமி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது சாய்பாபா கோவில். நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீராம நவமி நாளை ஒட்டி, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன. தொடர்ந்து ஸ்ரீராமர் படம் ஊஞ்சலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராமர் வேடமிட்டு பாடல்கள் பாடினர்.