ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையில், சிருங்கேரி பீடாதிபதிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் பாரதி தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதி சுவாமி, கடந்த, 5ம் தேதி முதல், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ராம்கோ குழுமம் சார்பில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம், அக்கோவிலை சிருங்கேரி சாரதாம்பாள் மடத்திற்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் சந்திரசேகர பாரதி சுவாமியின் வரலாற்று நுால் மற்றும் ராம்கோ குழும சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா வாழ்க்கை வரலாற்று நுாலை வெளியிட்டனர். வேதபாடசாலை வளாகத்தில் நடக்கும், சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையில் பக்தர்கள் பங்கேற்று, பீடாதிபதிகளை தரிசித்து, பாதுகாபூஜை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 14ல் வத்திராயிருப்பில் ஆன்மிக நிகழ்ச்சியில், பீடாதிபதிகள் பங்கேற்று அருளாசி வழங்குகின்றனர்.