பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
11:04
பழநி: பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு, பழநி முருகன ்கோயில் உண்டியலில் 22 நாட்களில் ரூ.2 கோடியே 22 லட்சத்து 14ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி பங்குனி உத்திர திருவிழா ஏப்.,3 முதல்12 வரை நடந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக தீர்த்தக்காவடிகளுடன் வந்தனர்.
நேற்று மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணும்பணி நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 22லட்சத்து 14ஆயிரத்து 215ம், தங்கம்-740 கிராம், வெள்ளி-12,200 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-1043 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.