கூடலுார்: கூடலுார் பாரதியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் விழாவில் மழை வேண்டி விளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அதிகாலையில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. அதற்குப்பின் சுவாமி ஊர்வலத்தில் முளைப்பாரி எடுத்துசென்றனர். மாலையில் கலைநிகழ்ச்சி நடந்தது.