Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரம்பரியமாக தொடரும் நான்கு ஏர் ... சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை மேக மூட்டத்தால் காண முடியவில்லை சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை மேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
01:04

கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு, கோவையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை, திருச்சிலுவை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதை நினைவு கூரும் விதமாக, கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும், தவக்காலத்தை கடை பிடித்து வருகின்றனர். சாம்பல் புதனன்று துவங்கும் இந்த தவக்காலம், யேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறுடன் முடிவடைகிறது. இறுதி வாரம், புனித வாரமாக கடை பிடிக்கப்படுகிறது. நேற்று முன்தினம், புனித வியாழனை முன்னிட்டு, கத்தோலிக்க தேவாலயங்களில், பாதம் கழுவும் சடங்கும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. யேசு, சிலுவையில் உயிர் விட்ட நாளாக நினைவு கூரப்படும் புனித வெள்ளி, நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கோவையிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், காலை மற்றும் மாலையில் இரு பிரிவாக வழிபாடுகள் நடத்தப்பட்டன. பெரியகடை வீதி, புனித மிக்கேல் பேராலயத்தில், காலை, 11:00 மணிக்கு, சிலுவைப்பாதை நடந்தது; மாலை, 5:00 மணிக்கு, திருச்சிலுவை ஆராதனை, திரு வார்த்தை வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்பட்டன.புலியகுளம் புனித அந்தோணியார் திருத்தலம், கோவைப்புதூர் குழந்தை இயேசு தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமநாதபுரம் உயிர்த்த யேசு தேவாலயம், செல்வபுரம் புனித வேளாங்கண்ணி தேவாலயம், காந்திபுரம் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதேபோன்ற வழிபாடுகள் நடந்தன. புனித வெள்ளியை முன்னிட்டு, பல்வேறு தேவாலயங்களிலும் பக்தர்களுக்கு, நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா சடங்குகள், இன்றிரவு 11:00 மணியிலிருந்து துவங்கவுள்ளன. நாளை, ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாககொண்டாடப்படவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar