காரியாபட்டி: காரியாபட்டி மல்லாங்கிணரில் நடந்த பங்குனி திருவிழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தல், சிறப்பு பூஜை செய்து, நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக சென்னகேசவபெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதி வழியாக சென்ற தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். அன்று இரவே தேர் நிலையை அடைந்தது.