பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
12:04
ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே நடந்த நாகம்மா கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மண்ணேங்கல் கிராமத்தில், பழமையான நாகம்மா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 14ல் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மதியம், மாலை என, மூன்று வேளையும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, கிராம தேவதைகளான சாக்கியம்மா, லகுமம்மா, கங்கம்மா, முனீஸ்வர சுவாமி, படேஸ்வரம்மா உட்பட, பத்துக்கும் மேற்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து, 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.