ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம் நடந்தது. மார்ச் 1ல் சாம்பல் புதனுடன் 40 நாள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். ஏப்., 9ல் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. ஏப்., 13ல் பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. தவக்காலத்தின் கடைசி வெள்ளி புனித வெள்ளி ஏப்., 14ல் கடைபிடிக்கப்பட்டது. மூன்று நாள் கழித்து உயிருடன் ஏசு எழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்த நிகழ்வே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, உச்சிப்புளி, மண்டபம் உள்பட பல இடங்களில் உள்ள சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.