Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தலவாடி மாரியம்மன் தங்கத்தகடு ... சிவகாசியில் யுகாதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா மே 9ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
12:04

தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 9ல் துவங்குகிறது. இதையொட்டி நாளை கொடியேற்றப்படுகிறது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றதாகும். தேனி மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இக்கோயில் சித்திரை திருவிழா நிகழ்வுகளாக இன்று கம்பம் கொண்டு வந்து அம்பாள் கோயில் வீட்டிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளுகிறார். நாளை கொடியேற்றம் நடக்கிறது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருப்பர். திருவிழா மே 9ம்தேதி துவங்கி ஒவ்வொரு நாளும் அம்பாள் மண்டகப்படிகளில் எழுந்தருளல், அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கு என உலா வருகிறார். 12ம்தேதி தேர் வடம் பிடித்து இழுத்தல், 15ம்தேதி தேர் நிலைக்கு வருகிறது. 16ம்தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறும்.

அம்மன் விரதம்

அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திருவிழா நாட்களில் செலுத்துவதே சிறந்த பலன் அளிக்கும். அம்மன் இன்று முதல் மே 8 ம்தேதி வரை விரதத்தில் இருப்பதால் இன்று முதல் மூலவருக்கு நெய்வேத்தியம் செய்யப்படுவதில்லை. இந்த நாட்களில் அம்மன் வணங்கும் ஈஸ்வர மூர்த்தியாய் விளங்கும் திருக்கம்பத்திற்கு துள்ளுமாவு பூஜை மட்டுமே செய்வது வழக்கம்.

அங்கபிரதட்சண அனுமதி

சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் மே 9 முதல் 16ம்தேதி வரையுள்ள எட்டு நாட்களுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தலாம். மேலும் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் ஏப்., 20ம்தேதி முதல் மே 7 ம்தேதிக்குள் செலுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பின் பக்தர்கள் வருகையை முறைப்படுத்த கோயில் வளாகத்தில் மரக்கம்புகள் ஊன்றி தடுப்பு அமைக்கப்படும். இதனால் அங்கப்பிரதட்சணம் செய்ய இடையூறு ஏற்படும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar