பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
12:04
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் சேவா மையத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம், டி.எஸ்.பி., சேது துவக்கி வைத்தனர். அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சயைப்பன், கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ஏசிவி சந்திரசேகர், ஏ.டி.கே.ராமசாமி, சீனிவாசன், பாண்டியராஜன், பி.என்.வி.டி. நாராயணசாமி, சீனிவாச ராகவன், ஆடிட்டர் ராஜசேகரன், காமதேனு மாரிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேவா மைய தலைவர் கருப்பையா, முன்னாள் கிராம அதிகாரி ராஜமாணிக்கம், நிர்வாகிகள் அய்யப்பன், வைரபெருமாள், பெரியகாமுத்துரை, பரமேஸ்வரன், ரத்தினம், நாகர் காமுத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.