செம்முனீஸ்வரர் கோவிலில் நாளை தீர்த்தக்குட நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2017 11:04
பவானி: பட்லூர் செம்முனீஸ்வரர் கோவிலில், நாளை தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பவானி தாலுகா, பட்லூர் பூசாரியூரில் செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடக்கிறது. கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நடப்பாண்டு விழா, 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் நாளை (27ம் தேதி) தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 28ல் முதல் வன பூஜை, மறு வன பூஜைகள் மே, 12, 13, 14ல் நடக்கிறது. மறு பூஜையன்று மூன்று நாட்கள் மாட்டு சந்தை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.