வால்பாறை: சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சந்தனம், திருநீர்,இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. மாலை , 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். பிரதோஷ பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.