ஊத்துக்கோட்டை : சித்திரை அமாவாசை தினத்தையொட்டி, பெரியாயி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு, பால் குடம் எடுத்தல் விழா, இன்று நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, மூன்றாம் ஆண்டு பால் குடம் எடுத்தல் விழா, இன்று, 28ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 8:00 மணிக்கு நடைபெற உள்ள இவ்விழாவில், எல்லம்பேட்டை மற்றும் சுற்றிஉள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பால் குடம் ஏந்தி சென்று, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.