விஷ்ணுவிற்கு பிரியமான சேனை நாயகர் என்பதால் இப்பெயர் பெற்றார். விஸ்வ முழுமையான, ஸேனர் படைத்தலைவர் என்பது பொருள். இலக்கணப்படி இச்சொற்கள் இணைந்து விஷ்வக்ஸேனர் என்றானது. வைணவ குருபரம்பரையில் மூன்றாவது குருநாதராக போற்றப்படுகிறார். யானை முகம் கொண்டவர் என்பது இவரது சிறப்பு.