ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். ஏனெனில், எல்லோருமே ஆண்டவரால் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் தான். இஸ்ரேலின் அரசராக இருந்தவர் தாவீது. இவர் ஈசாய் என்பவரின் மகன். இவருக்கு முன்னதாக ஈசாய்க்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். ஏழு பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார் ஈசாய். ஆனால், கடைக்குட்டி மகனான தாவீதுவிடம், மிகச்சிறுவனாக இருந்த காலத்திலேயே தனது ஆடுகளை ஒப்படைத்து, ஊரைவிட்டு வெகுதூரம் தள்ளியுள்ள மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்த்து வரச் சொன்னார். மேய்ச்சல் நிலத்திலேயே கூடாரம் அமைத்து தங்கியதால், அவருக்கு ஆடுகள் மட்டுமே உறவாயின.
தன் அன்பையெல்லாம் அவற்றின் மீது பொழிந்தார். ஆண்டவருக்கு இச்செயல் மிகவும் பிடித்தது. அவனை சிறப்பிக்க நினைத்த அவர், அவனை இஸ்ரேலின் ராஜõவாக்க எண்ணினார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை ஈசாயின் வீட்டுக்கு அனுப்பினார். அவரது பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க உத்தரவு இருப்பதாக அவர் ஈசாயிடம் சொன்னபோது, அவர் ஏழு பிள்ளைகளையும் வரிசையாக நிறுத்தினார். அப்போது கூட தாவீதுவை அவர் வரவழைக்கவில்லை. எட்டாவது பிள்ளையும் வராவிட்டால், உங்கள் வீட்டில் சாப்பிட மாட்டேன் என சாமுவேல் சொன்ன பிறகு, வேண்டா வெறுப்பாக தாவீதுவை வரவழைத்தான். ஆனால், அவரையே ராஜாவாகத் தேர்ந்தெடுக்கும்படி செய்தார் ஆண்டவர். பெற்ற பிள்ளைகளில் மட்டுமல்ல...யாராக இருந்தாலும் ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.