* இந்த உலகம், மகிழ்ச்சியின் ஊற்று எங்கே இருக்கிறது என அலைந்து தேடுகிறது. அதை அடைய எதைச் செய்யவும், துணிச்சலுடன் இருக்கிறது. ஆனால், அப்படிப் பெற்றுக் கொண்ட சந்தோஷம், திருப்தியைத் தருவதில்லை. கடலின் ஓயாத அலைபோல் இது நீடிக்கிறதே தவிர, சந்தோஷமும் சமாதானமும் கிடைப்பதில்லை. ஆகவே உலகம், நிறைவான சந்தோஷத்தை தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறது. * நீங்கள் அப்பம் அல்லாததற்காக பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக பிரயாசத்தையும் (சக்தி) செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு (ஆண்டவர்) கவனமாய் செவி கொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.