தேவிபட்டினம்: மே விடுமுறை தினத்தை முன்னிட்டு நவபாஷாண தீர்த்தத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பல்வேறு தோஷங்களுக்கு நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் காரணமாக பகலில் நவபாஷாணம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவில் இருந்தது. மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதால், நவபாஷாணதீர்த்தத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. காலை 11 மணிக்கு மேலும் வெயிலை பொருட்படுத்தாமல் ,மாலை 3 மணிவரை சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிட தக்கது.