பதிவு செய்த நாள்
02
மே
2017
12:05
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளம் பராமரிப்பில்லாததால், சுற்றுச்சுவர் உடைந்து, படி கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் காணப்படுகிறது.
திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் உள்ள குளம், பராமரிக்கப்படுவதே இல்லை. இதனால், சுற்றுப்புற பகுதி,
குடிமையமாக மாறிவிட்டது. இரவில், குடிமகன்கள் சுற்றுச்சுவரை ஒட்டி அமர்ந்து மது அருந்துகின்றனர். எங்கு பார்த்தாலும், காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களாக உள்ளன.
மற்றொருபுறம், சுற்றுச்சுவரும், தடுப்பு கம்பியும் உடைந்து, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால், உட்புற படிகற்கள் பெயர்ந்து, குளத்தை பார்ப்பதற்கே படுமோசமாக உள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் குளத்தை சீரமைத்து பராமரிக்க, நிர்வாகம் முன்வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.