பதிவு செய்த நாள்
02
மே
2017
01:05
ஊத்துக்கோட்ட: பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில்
உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், பவுர்ணமி நாளில், திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். வரும், 10ம் தேதி, 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு, சுமங்கலிகள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர்.