Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை கோவிலில் திருக்கல்யாணம் குன்றத்தூரில் சித்திரை தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் 10ல் நடவாவி உற்சவம் செல்லும் வரதராஜர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
03:05

காஞ்சிபுரம்:வரதராஜப்பெருமாள் சித்ரா பவுர்ணமி நாளில், ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள, நடவாவி கிணற்றில் எழுந்தருளும், நடவாவி உற்சவம், 10ம் தேதி, புதன் கிழமை
நடைபெறுகிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி நாளில், பாலாற்றில் எழுந்தருள்வார். அதற்காக, முதல் நாள் இரவு, கோவிலில் இருந்து புறப்பட்டு, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கல், தூசி, வாகை, நத்தக்கொள்ளை ஆகிய கிராமங்களுக்கு சென்று, சித்ரா பவுர்ணமி அன்று காலை, ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலை சென்றடைவார்.

அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, இரவு, 8:30 மணிக்கு அங்குள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார்.தரையில், சில மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள, குளிர்ந்த, 16 கால் மண்டபம் மற்றும் கிணற்றின் அருகே எழுந்தருளும்
பெருமாளுக்கு, சிறப்பு வழிபாடு நடைபெறும்.இரவு, 9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, பாலாறு செல்வார்.பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில், ஸ்ரீதேவி, பூதேவியருடன், பெருமாள் எழுந்தருள்வர். அன்று இரவு அங்கு, பெருமாள் மற்றும் தேவியருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

தொடர்ந்து, பிரம்ம ஆராதனை முடிந்து, நள்ளிரவில் பெருமாள் தூப்புல் தேசிகர் கோவிலுக்கு செல்வார். அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்படும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 7:00 மணிக்கு, பெருமாள் கோவிலை சென்றடைவார்.

இந்த விழாவிற்காக, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் ஆற்றில் கூடுவர். இரவு முழுவதும். பாலாற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar