பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.
செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 17ஆம் ஆண்டு 10 நாள் மகா உற்சவம் மற்றும் 8ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, அனுக்ஜை, கணபதி ஹோமம், 8.30 மணிக்கு செல்லியம்மன் அழைத்து வருதல், தொடர்ந்து சாகை வார்த்தல் இரவு 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரக வீதியுலா, நடந்தது.
நேற்று காலை அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் பெண்கள் 1008 பால் குடங்களை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாககொண்டு வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், நாராயணசாமி, விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.