பழநி கோயிலில் அக்னிநட்சத்திர விழா:கிரிவீதியில் மூலிகை காற்று
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2017 02:05
பழநி: பழநிகோயிலில் அக்னி நட்சத்திர விழா நேற்றுமுன்தினம் (மே8ல்) துவங்கி மே 21 வரை நடக்கிறது. கிரிவீதியில் கடம்ப மரப்பூக்களின் சஞ்சிவீ மூலிகை காற்றை அனுபவிக்க பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு நாட்களில் அக்னி நட்சத்திரம் விழா கொண்டாப்படுகிறது. இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் துவக்கநாளை (சித்திரைக் கழுவு) முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதருக்கு சீதக்கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது.
சித்திரை கழுவு நாட்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களிலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும், அந்த வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ண நோய் உட்பட பல்வேறு வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பெண்கள் கடம்ப மரப்பூக்களை தலையில் சூடி அதிகாலை நேரம், மாலை நேரங்களில் சஞ்சீவி மூலிகைக் காற்றை அனுபவிக்க மலைக்கோயிலை வலம் வருகின்றனர். நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.