பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு, விசேஷ பூஜைகள் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு மேல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
காமாட்சியம்மன்: நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண விழா கடந்த 2 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று, அம்மனுக்கு, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இன்று, காலை, 9:00 மணிக்கு, காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. இதே போல், தளி ரோடு காமாட்சியம்மன் கோவிலில், இன்று, மாலை 8:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள கடத்துார் அர்ச்சுனேவரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல்வேறு சிறப்புகள் உள்ள இந்தக்கோவிலில் சித்ராபவுர்ணமி விழா நடக்கிறது. இன்று மாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஹோமம், தீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு கோமதியம்மனுக்கு சிறப்பு மகாஅபிேஷகம், தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.