கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, கரூர் - திருச்சி சாலையில் பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று மதியம், 2:15 மணியளவில், அம்மன் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தேர்த்திருவிழா, கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.