Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரகுப்தர் பிறந்தநாள்: எமதர்மர் ... காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
11:05

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், மாதம்தோறும் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர்.

Default Image
Next News

சித்ரா பவுர்ணமி, நேற்று (மே 10) அதிகாலை, 12:09 மணிக்கு துவங்கி, இன்று அதிகாலை, 3:04 மணி வரை இருந்ததால், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றவாறு இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக, 35 இடங்களில் கார் பார்க்கிங் வசதி, 12 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 2,146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில், 18 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர், குளிர்ந்த நீர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, நித்யானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை, கிளி கோபுர நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி, வெளியேற்றினர். மற்ற பக்தர்கள், நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar