வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2017 10:05
நாகர்கோவில்: சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் நடத்தினர்.
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறந்தது. அன்று வேறு எந்த பூஜைகளும் நடக்க வில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.வைகாசி முதல் தேதியான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்த போது ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்பட்டது. பெரிய நடைப்பந்தல் நிரம்பி மரக்கூட்டம் ரோட்டிலும் கியூ காணப்பட்டது. இரண்டு மணி நேரம் கியூவில் நின்று தரிசனம் செய்தனர். கோடை கால விடுமுறை என்பதால் அதிகளவில் குழந்தைகளுக்கு அமுதுாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மே 19 தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். அந் நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜையும் நடைபெறும்.