சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2017 01:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கோவிலில் அம்மன் அலங்காரம் செய்து திருத்தேரில் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை முதல் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, அக்னி சட்டி மற்றும் அலகு குத்துதல், கரும்பு கட்டுகளில் தங்கள் குழந்தைகளை கட்டி எடுத்து வருதல், அந்தரத்தில் தொங்கியபடி உடலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். லாலாப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.