பதிவு செய்த நாள்
24
மே
2017
12:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை ஆகியவற்றை, என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.
திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் புராண சிறப்பும், வரலாற்று பெருமையும் கொண்டது. நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், அன்னதானம் செய்யும் தட்டுகளை, ஆங்காங்கே
வீசிச் செல்கின்றனர். இந்திய தேசிய மாணவர் படையின், ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு கூட்டு பயிற்சி முகாம், திருச்செங்கோடு, தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 150க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் மலைக் கோவிலை தூய்மைப்படுத்தினர். கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள், பிரசாத தட்டுகள் முதலியவற்றை அகற்றினர். மேலும், அறநிலையத்துறை சார்பில், கோவில் வளாகத்தை
தூய்மையாக வைக்க, குப்பைத் தொட்டிகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.